ஐம்பெரும் பூதங்களில் காற்றும், நீரும், நிலமும் உயிரினங்களின் வாழ்விற்கு அடிப்படை
“நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு” -குறள்
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நீரின் அருமையை உணர்ந்ததால்தான் செந்தாப்போதார் நீரின்றி உலகமே இல்லை என்றுஎழுதியுள்ளார், பூமியில் 70 சதவிகிதம் பரப்பைக்கொண்டது நீர் என்று புவியியலும், அனைத்து உயிரினிங்களின் தொடக்கம் நீர் என்றுஉயிரியலும், மனித நாகரிகத்தின் தொட்டில் என்று வரலாறும், இரண்டு பங்கு ஹைட்ரஜன் அணுவும், ஒரு பங்கு ஆக்சிஜன் அணுவும்
சேர்ந்துதான் நீர் என்று வேதியியலும், நிறமும் மணமும் அற்ற தெளிவான திரவம் தான் நீர் என்று அகராதியும் உயிரைப் படைக்க, காக்க, அழிக்க வல்லதுநீர் என்று தத்துவமும் கூறினாலும் இந்த நூற்றாண்டில் உலக நாடுகளுக்கு இடையே, ஏன் மனித சமுதாயத்திற்குள்ளே பிளவைஏற்படுத்தப்போவது நீர் என்பதே நிதர்சனமான உண்மை, மனித சமுதாயத்திற்கு கிடைத்த, விலைமதிப்பில்லாத, இயற்கை வளமான நீர்”தனிமனித சொத்து அல்ல, ஒட்டு மொத்த மனித சமுதாயம் மட்டுமில்லாது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான சொத்து (COMMUNITY RESOURCE)” என்ற கருத்தினை மக்கள் மனங்களில் பதிவு செய்ய விரும்புகிறேன், என் விருப்பம் ஈடேறுமாயின் இக்கட்டுரைக்கும், தமிழ்வெளிபதிவுக்கும் கிடைத்த வெற்றியாக கருதலாம், நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் இயற்கை வளங்களை வருங்கால சந்ததியருக்கும் மாசுபடாமல் விட்டுச் செல்ல வேண்டும் என்று நாம் அனைவரும் உறுதி கொள்ள வேண்டும்.
சேர்ந்துதான் நீர் என்று வேதியியலும், நிறமும் மணமும் அற்ற தெளிவான திரவம் தான் நீர் என்று அகராதியும் உயிரைப் படைக்க, காக்க, அழிக்க வல்லதுநீர் என்று தத்துவமும் கூறினாலும் இந்த நூற்றாண்டில் உலக நாடுகளுக்கு இடையே, ஏன் மனித சமுதாயத்திற்குள்ளே பிளவைஏற்படுத்தப்போவது நீர் என்பதே நிதர்சனமான உண்மை, மனித சமுதாயத்திற்கு கிடைத்த, விலைமதிப்பில்லாத, இயற்கை வளமான நீர்”தனிமனித சொத்து அல்ல, ஒட்டு மொத்த மனித சமுதாயம் மட்டுமில்லாது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான சொத்து (COMMUNITY RESOURCE)” என்ற கருத்தினை மக்கள் மனங்களில் பதிவு செய்ய விரும்புகிறேன், என் விருப்பம் ஈடேறுமாயின் இக்கட்டுரைக்கும், தமிழ்வெளிபதிவுக்கும் கிடைத்த வெற்றியாக கருதலாம், நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் இயற்கை வளங்களை வருங்கால சந்ததியருக்கும் மாசுபடாமல் விட்டுச் செல்ல வேண்டும் என்று நாம் அனைவரும் உறுதி கொள்ள வேண்டும்.
பூமியில் கிடைக்க கூடிய நீரில் 0,5 சதவிகிதம் மட்டுமே மனிதன் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது, இதன் அளவும் தற்சமயம் குறையத் துவங்கிஉள்ளது, இதனால் தான் நீரை அடிப்படை உரிமையாக்கி உள்ளனர், உருகவே நாட்டினர். 2004 அக்டோபர் 31-ம் தேதி இதற்கான சட்டம்இயற்றப்பட்டதால் இதை நினைவு கூறும் வகையில் Blue October Movement என்று உலகம் முழுதும் அனுசரிக்கப்படுகிறது. மனித குலத்திற்குஉள்ள நீர் ஆதாரங்களில் நிலத்தடி நீர் முக்கிய பங்கு வகிக்கிறது, எனவே நிலத்தடிநீரை பராமரித்து, நியாயமாக பங்கிட்டு பயன்படுத்தப்படுவதுஇத்தருணத்தில் அவசியமான ஒன்றாகும். நீர்வள ஆதாரமும், பயன்பாடும் இடத்திற்கு இடம் வேறுபடுகிறது என்பதையும் கவனத்தில்வைத்துக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment